×

ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் வேகத்தடை வேண்டும்: மக்கள் வலியுறுத்தல்

கடத்தூர்: கடத்தூர் அடுத்த ஒடசல்பட்டி கூட்ரோடு, தர்மபுரி நகருக்கு மைய பகுதியாக உள்ளது. இந்த வழியாக தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் வழியாக தர்மபுரிக்கு தினசரியில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் மூன்று முனை சந்திப்பு உள்ளது. இந்த வழியாக அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.விபத்தை தவிர்க்கும் வகையில், ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் வேகத்தடை அமைக்கவும், விழிப்புணர்வு பலகைகள், போக்குவரத்து சிக்னல் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் வேகத்தடை வேண்டும்: மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Odasalpatti Kootrodu ,Kadoor ,Odasalpatti Koodrod ,Dharmapuri ,Arur ,Papriprettipatti ,Dinakaran ,
× RELATED இளம்பெண் மாயம்